நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது ஒரே மகள் ஆராத்யா பச்சன். சில யு டியூப் சேனல்களை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 11 வயதான மைனர் பெண்ணான தன் மீது சில யு டியூப் சேனல்கள் தன்னுடைய உடல்நலம் குறித்து ஆதாராமற்ற வதந்திகளை வெளியிடுவதாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபங்களை 'டிரோல்' என்ற பெயரில் கிண்டலடிப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்களின் குழந்தைகளைப் பற்றிக் கூட இப்படி நாகரீகமற்ற முறையில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஆராத்யா வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பு நாகரீகமற்ற முறையில் பதிவிடும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.