அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரது ஒரே மகள் ஆராத்யா பச்சன். சில யு டியூப் சேனல்களை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 11 வயதான மைனர் பெண்ணான தன் மீது சில யு டியூப் சேனல்கள் தன்னுடைய உடல்நலம் குறித்து ஆதாராமற்ற வதந்திகளை வெளியிடுவதாக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பிரபங்களை 'டிரோல்' என்ற பெயரில் கிண்டலடிப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அவர்களின் குழந்தைகளைப் பற்றிக் கூட இப்படி நாகரீகமற்ற முறையில் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஆராத்யா வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பு நாகரீகமற்ற முறையில் பதிவிடும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.