மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
மலையாள திரையுலகில் ஒழிவு திவசத்தே கலி, செக்சி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனல்குமார் சசிதரன். 2020ல் மஞ்சு வாரியார் நடிப்பில் காயாட்டம் என்கிற படத்தை இவர் இயக்கினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை மஞ்சுவாரியரை தான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் போனை எடுக்கவில்லை எனவும், குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவரிடமிருந்து தனக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. மஞ்சுவாரியார் தற்போது ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறார். அவரது மேனேஜர்கள் மூலமாக அவருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது என்பது போன்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் கொச்சி போலீசாரிடம் சனல்குமார் சசிதரன், தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், சோசியல் மீடியா பக்கத்தில் தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்புவதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் போலீசார் இயக்குனர் சனல்குமார் சசிதரனை தங்களது காவலில் எடுத்துள்ளனர். இதையடுத்து அவரை மஞ்சுவாரியார் புகார் கொடுத்துள்ள கொச்சி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று இதுபற்றி விசாரிக்க உள்ளனர்,
இதுபற்றி மலையாள திரையுலகில் சிலர் கூறும்போது, “காயாட்டம் படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோது இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மஞ்சுவாரியர் இயக்குனருடன் பெரிய அளவில் தொடர்பில் இல்லை என்றும் சொல்கிறார்கள். அதேசமயம் மஞ்சுவாரியர் மீது இப்படி திடீரென தேவையில்லாமல் அவர் ஆபத்தில் இருப்பதாக சோசியல் மீடியா மூலமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருப்பதில் நிச்சயமாக ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்றே பலரும் கூறுகின்றனர். போலீசார் விசாரணையில் சனல்குமார் சசிதரன் ஏன் இப்படி செய்தார் என்கிற உண்மை தெரிய வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.