சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி தீவிர அரசியலில் இறங்கினார்.
சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநில நகரி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ.,வாக இருக்கும் ரோஜா, சமீபத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சரான பின் ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகர் சிரஞ்சீவியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அது குறித்து, “நான் சினிமாவிலிருந்து விலகியதற்கும், ஆந்திர மாநில அமைச்சரானதற்கும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்தது மகிழ்ச்சி. சுரேகா (சிரஞ்சீவி மனைவி) அவர்களுக்கு சிறப்பு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவி, ரோஜா இருவரும் இணைந்து 'முட்டா மேஸ்திரி (1993), முக்குரு மொங்கலு (1994), பிக் பாஸ் (1995) ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.