என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் மாலா பார்வதி.. தமிழில் 'இது என்ன மாயம்' மற்றும் 'நிமிர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் புகார் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார் மாலா பார்வதி. இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நடிகர் சங்க செயலருக்கு ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பி உள்ளார் மாலா பார்வதி.
கடந்த சில நாட்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்பாபு மீது இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் கூறி போலீஸில் புகார் அளித்தது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்பாபுவை போலீசார் தேடி வரும் நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அவரை நீக்க வேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்த நடிகைகளும் மற்றும் சிலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது விஜய்பாபு தானாகவே முன்வந்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன், என்றும் தன் மீது உள்ள குற்றச்சாட்டு பொய் என நிரூபித்து விட்டு அதன்பிறகு மீண்டும் சங்கத்தில் இணைந்து கொள்கிறேன் என்றும் தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார். ஆனால் அப்படி அவர் அனுப்புவதற்கு முன்னதாகவே நடிகர் சங்கம் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற விரக்தியில் தான் தனது ராஜினாமாவை அனுப்பி வைத்துள்ளார் மாலா பார்வதி.
இதுபற்றி அவர் கூறும்போது, “நடிகர் சங்கத்தில் புகார் பிரிவில் என்னை நியமித்தபோது உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் நம்மால் நியாயமான முறையில் தீர்வு காணமுடியும் என சந்தோஷத்துடன் இதில் பொறுப்பேற்றேன். ஆனால் தற்போது தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கு இங்கே நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன என்பதால் இதிலிருந்து நான் வெளியேறுகிறேன்” எனக் கூறியுள்ளார் மாலா பார்வதி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாலா பார்வதியின் மகன் ஒப்பனைக் கலைஞரை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானபோது அதுபற்றி விசாரித்து அது உண்மை என தெரிந்ததும் சம்பந்தப்பட்ட பெண்ணிடமே தன் மகன் மீது போலீசில் புகார் கொடுக்கும்படி கூறியவர் தான் இந்த மாலா பார்வதி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.