'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

மலையாள திரையுலகில் தொண்ணூறுகளில் மும்மூர்த்திகள் என சொல்லப்பட்டவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி. ஆனால் மோகன்லாலும் மம்முட்டியும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பலவித பொறுப்புகள் வகித்து ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் 90களில் வெளிநாட்டிற்கு சென்று கலை நிகழ்ச்சி நடத்துவதில் சுரேஷ்கோபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சங்கம் சம்பந்தமான எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை சுரேஷ்கோபி தவிர்த்து வந்தார்.
குறிப்பாக நடிகர் சங்கம் பக்கமாக கடந்த 20 வருடமாக அவர் வரவே இல்லை. இந்த நிலையில் தனது மனக்கசப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு வருகை தந்தார் சுரேஷ்கோபி. 20 வருடம் கழித்து நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த அவரை சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் வில்லன் நடிகர் பாபுராஜ், நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




