தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
மலையாள திரையுலகில் தொண்ணூறுகளில் மும்மூர்த்திகள் என சொல்லப்பட்டவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி. ஆனால் மோகன்லாலும் மம்முட்டியும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பலவித பொறுப்புகள் வகித்து ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் 90களில் வெளிநாட்டிற்கு சென்று கலை நிகழ்ச்சி நடத்துவதில் சுரேஷ்கோபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சங்கம் சம்பந்தமான எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை சுரேஷ்கோபி தவிர்த்து வந்தார்.
குறிப்பாக நடிகர் சங்கம் பக்கமாக கடந்த 20 வருடமாக அவர் வரவே இல்லை. இந்த நிலையில் தனது மனக்கசப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு வருகை தந்தார் சுரேஷ்கோபி. 20 வருடம் கழித்து நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த அவரை சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் வில்லன் நடிகர் பாபுராஜ், நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.