விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்து விட்ட நிலையில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றிப்படமாக்கி மலையாள திரையுலகில் முதன் முறையாக 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற நகைச்சுவை படத்தையும் எடுத்து ஹிட்டாக்கினார்.
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளார் பிரித்விராஜ். இந்தநிலையில் சோசியல் மீடியா சாட்டிங்கில் ரசிகர்களுடன் பேசும்போது மோகன்லாலை வைத்து இரண்டு படங்கள் இயக்கி விட்டீர்கள்..? மம்முட்டியை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் நிச்சயமாக மம்முட்டியை வைத்து படம் இயக்க இருக்கிறேன் அதற்காக எனது நண்பரும் லூசிபர் பட கதாசிரியருமான நடிகர் முரளிகோபி மம்முட்டிக்கு என்றே ஸ்பெஷலான ஒரு கதையை உருவாக்கி வருகிறார். கதை தயாரானதும் மம்முட்டியின் முன்னால் சென்று கதை சொல்வதற்கு உட்கார இருக்கிறேன்.. ஆனால் முழுக்கதையும் தயாராவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.. அதுவரை பொறுத்திருங்கள்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.