‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
தெலுங்கு சினிமாவில் 80களில் முன்னணி தயாரிப்பாளராகவும், பைனான்சியராகவும் இருந்தவர் நாராயண் தாஸ் நரங். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை தலைவராகவும் பணியாற்றினார். ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி, நாக சௌர்யா நடித்த லக்ஷ்யா படங்களை தயாரித்திருந்தார் நாகார்ஜுனா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் தி கோஸ்ட் திரைப்படம் மற்றும் தனுஷ், சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் ஆகியவற்றை தயாரித்து வந்தார். தற்போது தயாரிப்பு பணிகளை மகன் சுனில் நரங் கவனித்து வருகிறார்.
76 வயதான நாராயண் சினிமா மற்றும் தொழில்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாக மூச்சு திணறல் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயண் தாஸ் நரங் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரை பிரபலங்களான மகேஷ் பாபு, சிரஞ்சீவி, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாராயண் தாஸ் மறைவுக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எங்களின் அன்புக்குரிய தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண் சிங் தாஸ் மரணமடைந்த தகவலை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். சுனில் நரங் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். என பதிவிட்டுள்ளார்.