20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இசை அமைப்பாளர் இளையராஜா நூல் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி நனவாக்கி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அம்பேத்கரையும் மோடியையும் இணைத்து பேசுவதா என்று இளையராஜாவை ஒரு சில அமைப்புகளும், ஒரு சிலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவருமான விஜயகாந்த் வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தைச் சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோல தான் இங்கு யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.
இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.