டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை ரேவதி இயக்கி, தேசிய விருது பெற்ற ‛மித்ரு மை பிரண்ட்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம சினிமாவுக்கு அறிமுகமானவர் வி.பிரியா. பின்னர் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கண்ட நாள் முதல் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு ‛கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தம் என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார்.
இந்த தொடரின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது: வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறேன். கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜு சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு. எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இந்த ஒரிஜினல் சீரீஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார் பிரியா.