அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கில் திலீப்புடன் அவரது மனைவி உள்ளிட்டவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரு வழக்கிலும் தொடர்புடைய 11 ஆயிரத்து 161 வீடியோக்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. செல்போனில் அழிக்கப்பட்ட இந்த வீடியோக்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதுதவிர லட்சத்தை தாண்டிய போட்டோக்களும் மீட்கப்பட்டுள்ளதாம்.
இந்த வீடியோ மற்றும் ஆடியோ, போட்டோ ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பிக்க விவாரணை அதிகாரிகள் 3 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார்களாம். காரணம் 6,682 வீடியோக்கள், 10,879 ஆடியோக்கள் மற்றும் 65,384 புகைப்படங்களை சோதிக்க இந்த கால அவகாசம் தேவைப்படுகிறதாம். திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் இந்த வழக்கில் இருந்து அவர் தப்ப முடியாது என்கிறார்கள்.