பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் 61வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. வலிமை படத்தின் தாமதம், படப்பிடிப்பில் நடந்த விபத்து, படம் பற்றிய இருவித விமர்சனம் என வலிமை அஜித்துக்கு கொஞ்சம் வலி தந்த படமாகத்தான் அமைந்தது. அதோடு அஜித்துக்கு இதுவரை 7 ஆபரேஷன்கள் வரை நடந்துள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்து படங்கள் இணையதளத்தில் வெளியானது.
ஆனால் இந்த வழிபாட்டுக்கு முன்னதாக அஜித் 15 நாட்கள் வரை பாலக்காடு பகுதியில் உள்ள பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருந்து இயற்கை வைத்தியம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெறுகிறவர்கள் கடைசி நாளில் கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.