'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உலக புகழ்பெற்ற சின்னத்திரை தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ சேனலில் 7 சீசன்களாக வெளியான இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரும் இப்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் ஆகிவிட்டனர். சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்த தொடரின் கடைசி சீசன் மதர் ஆப் டிராகன் கொல்லப்படுவதோடு முடிந்தது.
அதனால் இந்த கதையை அப்படியே தொடர முடியாது என்பதால் புதிய கதையாக உருவாக்கி உள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி அதனை ஹவுஸ் ஆப் டிராகன் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள். இதில் முற்றிலும் புதியவர்கள் நடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எச்பிஆ சேனலில் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.