பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
இயக்குனர் ராஜமவுலியின் டைரக்சனில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பாகுபலி படத்தில் கட்டப்பா சிவகாமி, காளகேயன் என பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய நட்சத்திரங்களை தாண்டி பெரிய அளவில் யாரும் ரசிகர்களின் கவனத்தில் பதியவில்லை.
அப்படி பதிந்தவர்களில் முக்கியமானவர் இந்தப் படத்தின் கதையின் அடிநாதமாக விளங்கிய ஆதிவாசி சிறுமி மல்லி தான். பலரும் இந்த சிறுமி ஆந்திரா அல்லது தெலுங்கானாவைய சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்க இவரை சண்டிகரில் இருந்து அழைத்து வந்து நடிக்க வைத்துள்ளார் ராஜமவுலி என்கிற விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
டுவிங்கிள் சர்மா என்கிற இந்த சிறுமி டான்ஸ் இந்தியா டான்ஸ் என்கிற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். அதுமட்டுமல்ல ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இதை எதேச்சையாக பார்த்த ராஜமவுலி சண்டிகரில் இருந்து அவரை விமானத்தில் வரவழைத்து ஆடிசன் வைத்து இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தாராம். இந்த படத்தில் நடிக்கும்போது எட்டாம் வகுப்பு படித்து வந்த இந்த மல்லி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.