பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஷால் தற்போது லத்தி படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் இந்த படத்தையும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தயாரிப்பாளர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது.
ஒருவேளை விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்த படத்தை தயாரிக்கலாம் என தீர்மானித்தால் மட்டுமே தொடர்ந்து அந்த படம் படப்பிடிப்பு என்கிற நிலைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.