ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
விஷால் தற்போது லத்தி படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் இந்த படத்தையும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தயாரிப்பாளர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது.
ஒருவேளை விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்த படத்தை தயாரிக்கலாம் என தீர்மானித்தால் மட்டுமே தொடர்ந்து அந்த படம் படப்பிடிப்பு என்கிற நிலைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.