எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஷால் தற்போது லத்தி படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் இந்த படத்தையும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தயாரிப்பாளர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது.
ஒருவேளை விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்த படத்தை தயாரிக்கலாம் என தீர்மானித்தால் மட்டுமே தொடர்ந்து அந்த படம் படப்பிடிப்பு என்கிற நிலைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.