100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் பிரம்மாண்ட வெளியீடாக 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம் கொரோனா அலை காரணமாக தள்ளிப் போடப்பட்டு இப்போதுதான் வெளியாக உள்ளது. இருப்பினும் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' அலை காரணமாக ஏற்கெனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களின் நிலை தடுமாற்றம் கண்டுள்ளது. தமிழில் 'எதற்கும் துணிந்தவன்', கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் கடைசி கமர்ஷியல் படமான 'ஜேம்ஸ்' ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஹிந்தியில் 'காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கான தியேட்டர்களும் குறையும் என்கிறார்கள். நாளையுடன் 'வலிமை' படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25ல் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
'ஜேம்ஸ்' இயக்குனரான சேத்தன் குமார் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜேம்ஸ்' படத்தை தியேட்டர்காரர்கள் தூக்கக் கூடாது என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அந்தப் படம் பற்றிய 'பாசிட்டிவ் டாக்' அதிகம் வந்தால் 'பாகுபலி 2' படத்தை விடவும் அதிக வசூல் செய்யும் என தெலுங்குத் திரையுலகில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.




