ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் |

ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் பிரம்மாண்ட வெளியீடாக 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம் கொரோனா அலை காரணமாக தள்ளிப் போடப்பட்டு இப்போதுதான் வெளியாக உள்ளது. இருப்பினும் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' அலை காரணமாக ஏற்கெனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களின் நிலை தடுமாற்றம் கண்டுள்ளது. தமிழில் 'எதற்கும் துணிந்தவன்', கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் கடைசி கமர்ஷியல் படமான 'ஜேம்ஸ்' ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஹிந்தியில் 'காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கான தியேட்டர்களும் குறையும் என்கிறார்கள். நாளையுடன் 'வலிமை' படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25ல் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
'ஜேம்ஸ்' இயக்குனரான சேத்தன் குமார் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜேம்ஸ்' படத்தை தியேட்டர்காரர்கள் தூக்கக் கூடாது என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அந்தப் படம் பற்றிய 'பாசிட்டிவ் டாக்' அதிகம் வந்தால் 'பாகுபலி 2' படத்தை விடவும் அதிக வசூல் செய்யும் என தெலுங்குத் திரையுலகில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.