சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் பிரம்மாண்ட வெளியீடாக 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம் கொரோனா அலை காரணமாக தள்ளிப் போடப்பட்டு இப்போதுதான் வெளியாக உள்ளது. இருப்பினும் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' அலை காரணமாக ஏற்கெனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களின் நிலை தடுமாற்றம் கண்டுள்ளது. தமிழில் 'எதற்கும் துணிந்தவன்', கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் கடைசி கமர்ஷியல் படமான 'ஜேம்ஸ்' ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஹிந்தியில் 'காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கான தியேட்டர்களும் குறையும் என்கிறார்கள். நாளையுடன் 'வலிமை' படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25ல் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
'ஜேம்ஸ்' இயக்குனரான சேத்தன் குமார் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜேம்ஸ்' படத்தை தியேட்டர்காரர்கள் தூக்கக் கூடாது என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அந்தப் படம் பற்றிய 'பாசிட்டிவ் டாக்' அதிகம் வந்தால் 'பாகுபலி 2' படத்தை விடவும் அதிக வசூல் செய்யும் என தெலுங்குத் திரையுலகில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.