அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் தலைவர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் சங்கத்தின் மரபுபடி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். எங்களின் பிரச்னைகளை அக்கறையோடு கேட்டறிந்த முதல்வர், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். என்றார் நாசர்.
பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது: நடிகர் சங்கம் வழக்குளை சந்திக்காமல் தேர்தல் நடந்த அன்றே நாங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்திருந்தால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்ககப்பட்டிருக்கும். ஏற்கெனவே 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க 21 கோடி தேவை. முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிப்பதே எங்களின் முதல் பணியாக இருக்கும். என்றார்.