டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் தலைவர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் சங்கத்தின் மரபுபடி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். எங்களின் பிரச்னைகளை அக்கறையோடு கேட்டறிந்த முதல்வர், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். என்றார் நாசர்.
பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது: நடிகர் சங்கம் வழக்குளை சந்திக்காமல் தேர்தல் நடந்த அன்றே நாங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்திருந்தால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்ககப்பட்டிருக்கும். ஏற்கெனவே 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க 21 கோடி தேவை. முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிப்பதே எங்களின் முதல் பணியாக இருக்கும். என்றார்.




