சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து | பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா |
இலங்கையில் நடந்த இறுதிபோரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி இசைப்ரியாவின் வாழ்க்கையை 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் இயக்கிய கு.கணேசன், தற்போது 'காதல் செய்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒன்றாக கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் மறுத்ததோடு படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கு.கணேசன் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நான் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கியிருந்தேன். இது இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இந்தியாவில் எங்குமே வெளியிடக்கூடாது என்று தடை விதித்தனர். தணிக்கை குழுவை எதிர்த்து போராடி படத்தை வெளியிட்டேன்.
அந்த படத்திற்கு பிரச்னை செய்த அதே குழுவினர்தான் இப்போது காதல் செய் படத்தையும் பார்த்தனர். போர்க்களத்தில் பூ பட நேரத்தில் நடந்த பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு காதல் செய் படத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க காதல் படம். இந்த பிரச்னையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என்கிறார்.