இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இலங்கையில் நடந்த இறுதிபோரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி இசைப்ரியாவின் வாழ்க்கையை 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் இயக்கிய கு.கணேசன், தற்போது 'காதல் செய்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒன்றாக கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் மறுத்ததோடு படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கு.கணேசன் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நான் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கியிருந்தேன். இது இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இந்தியாவில் எங்குமே வெளியிடக்கூடாது என்று தடை விதித்தனர். தணிக்கை குழுவை எதிர்த்து போராடி படத்தை வெளியிட்டேன்.
அந்த படத்திற்கு பிரச்னை செய்த அதே குழுவினர்தான் இப்போது காதல் செய் படத்தையும் பார்த்தனர். போர்க்களத்தில் பூ பட நேரத்தில் நடந்த பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு காதல் செய் படத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க காதல் படம். இந்த பிரச்னையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என்கிறார்.