Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி கார், பைக் ஓட்ட போவதில்லை : யாஷிகா அதிரடி அறிவிப்பு

10 மார், 2022 - 19:23 IST
எழுத்தின் அளவு:
Yashika-decides-to-quit-driving

வெள்ளித்திரையில் அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமானாலும் கூட, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, யாஷிகா ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகி உடன் பயணித்த அவரது தோழி மரணம் அடைந்தார்.. காலில் அடிபட்ட யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்து வழக்கம்போல தனது வேலைகளை கவனித்து வருகிறார்..

அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், ரசிகர்களின் கேள்விகளுக்கு தவறாமல் பதிலளித்து வருகிறார். அப்படி ஒரு ரசிகர் உங்களிடம் இருந்த ஊதா நிற புல்லட் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த யாஷிகா, “அந்த பைக் வீட்டில் தான் இருக்கிறது. எனது அண்ணன் இப்போது அதை உபயோகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான தகவல்.. இனிமேல் நான் கார் மற்றும் பைக் ஓட்ட போவது இல்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.

அதற்கு ரசிகர்கள் சிலர் எதற்காக இந்த அதிர்ச்சி முடிவு என்று கேட்டதற்கு, “என் தோழியை நான்தான் கொன்று விட்டேன் என உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.. அதனால்தான் இந்த முடிவு” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இறுதிக்கட்டத்தில் சர்தார்இறுதிக்கட்டத்தில் சர்தார் வெப்சீரிஸ்-க்காக பார்வதியுடன் இணைந்த பிரியா பவானி சங்கர் வெப்சீரிஸ்-க்காக பார்வதியுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
12 மார், 2022 - 11:37 Report Abuse
Swaminathan Chandramouli தோழி மரணம் அடைந்ததற்கு இந்த யாஷிகா தான் கரணம் அந்த காரில் இருந்த அனைவரும் போதையில் இருந்தனர் ஒட்டிய யாஷிகாவும் போதையில் இருந்தார் போலீஸ் எதற்காக அவர் மீது வழக்கு பதியவில்லை ? இதில் ஏதோ மர்மம் உள்ளது
Rate this:
radha - tuticorin,இந்தியா
11 மார், 2022 - 13:47 Report Abuse
radha அப்படியாவது இனிமேல் சரக்கு அடிக்கப்போவதில்லைன்னு சொல்லுதான்னு பாருங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in