சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கதாநாயகனாக சிம்புவுக்கு கைகொடுத்த படமாக மட்டுமல்ல, ஹீரோ சிம்புவா, இல்லை எஸ்ஜே சூர்யாவா என கேட்கும் அளவுக்கு இருவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமை இரண்டையும் நடிகர் ராணாவின் தந்தை தனது சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பாக கைப்பற்றியுள்ளார். அதேசமயம் டப்பிங் செய்வதை விட ரீமேக் செய்வதில் தான் அதிக ஆர்வமும் காட்டி வருகிறாராம்.
தெலுங்கில் நாகசைதன்யா - பூஜா ஹெக்டே இருவரும் நடிக்க, தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, எஸ்.ஜே.சூர்யாவுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்த அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ராணா நடிப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..