'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
சின்னத்திரை ரசிகர்களுக்கு மகேஸ்வரி பற்றிய அறிமுக தேவையில்லை. வீஜேவான இவர் தொடர்ந்து சின்னத்திரையில் ஹீரோயினாகவும் தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தமட்டில் கணவருடன் விவாகரத்து பெற்று மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த கசப்பான அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி இன்று இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது ஹாட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் கருப்பு சோபாவில் சாயந்த படி, கவர்ச்சியாகவும், கெத்தாகவும் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதன் வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஸ்வரி, அதன் உடன் 'ஏனென்றால் நான் தான் ராணி' என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
திரையுலகில் இரண்டாவது முறையாக என்ட்ரி கொடுத்துள்ள மகேஸ்வரி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளில் வீஜேவாக கலக்கி வரும் மகேஸ்வரி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.