பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் பிப்-11ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் எப்ஐஆர். மனு ஆனந்த் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் கவுதம் மேனனிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அந்த குரு விசுவாசத்தின் பேரில் கவுதம் மேனனையும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் மனு ஆனந்த்.
கவுதம் மேனனுடன் பணியாற்றிய எட்டு வருடங்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் அஜித்துடன் இணைந்து பணியாற்றி அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு மனு ஆனந்த்திற்கு கிடைத்தது.. அந்த சமயத்தில் அஜித் அவ்வப்போது சொன்ன ஆலோசனைகளும் அறிவுரைகளும் இந்த எப்ஐஆர் பட உருவாக்கத்தின்போது ரொம்பவே பயன்பட்டது என கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..
அஜித் படத்தை இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள மனு ஆனந்த், இப்போதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை.. அவர் மீது நடிகராகவும் தனிப்பட முறையிலும் மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஒருவேளை அவரது படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக எனக்கு இருக்கும் என கூறியுள்ளார் மனு ஆனந்த்.