கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
விஷ்ணு விஷால் நடிப்பில் வரும் பிப்-11ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் எப்ஐஆர். மனு ஆனந்த் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் கவுதம் மேனனிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அந்த குரு விசுவாசத்தின் பேரில் கவுதம் மேனனையும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் மனு ஆனந்த்.
கவுதம் மேனனுடன் பணியாற்றிய எட்டு வருடங்களில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் அஜித்துடன் இணைந்து பணியாற்றி அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு மனு ஆனந்த்திற்கு கிடைத்தது.. அந்த சமயத்தில் அஜித் அவ்வப்போது சொன்ன ஆலோசனைகளும் அறிவுரைகளும் இந்த எப்ஐஆர் பட உருவாக்கத்தின்போது ரொம்பவே பயன்பட்டது என கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..
அஜித் படத்தை இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள மனு ஆனந்த், இப்போதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை.. அவர் மீது நடிகராகவும் தனிப்பட முறையிலும் மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளேன். ஒருவேளை அவரது படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக எனக்கு இருக்கும் என கூறியுள்ளார் மனு ஆனந்த்.