எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா ஒமிக்ரான் அலை சற்றே குறைந்திருப்பதால் பிப்ரவரி மாதத்திற்கான புதிய தளர்வுகளை மாநில அரசு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதனால், தினசரி 4 காட்சிகளை இனி தியேட்டர்களில் நடத்த முடியும். எனவே, புதிய படங்களை வெளியிடுவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
பொங்கலுக்கு வெளிவர வேண்டிய அஜித் நடித்துள்ள 'வலிமை', மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் முக்கிய வெளியீடாய் விஷால், டிம்பிள் ஹயாதி நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' பிப்ரவரி 15க்குப் பிறகு வெளியாகலாம். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள 'டான்' படம் 'வலிமை' வெளிவந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகள் பற்றி உறுதியாகத் தெரிந்த பின்தான் மற்ற தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளைப் பற்றி முடிவு செய்வார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.