அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' |

கொரோனா ஒமிக்ரான் அலை சற்றே குறைந்திருப்பதால் பிப்ரவரி மாதத்திற்கான புதிய தளர்வுகளை மாநில அரசு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதனால், தினசரி 4 காட்சிகளை இனி தியேட்டர்களில் நடத்த முடியும். எனவே, புதிய படங்களை வெளியிடுவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
பொங்கலுக்கு வெளிவர வேண்டிய அஜித் நடித்துள்ள 'வலிமை', மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் முக்கிய வெளியீடாய் விஷால், டிம்பிள் ஹயாதி நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' பிப்ரவரி 15க்குப் பிறகு வெளியாகலாம். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள 'டான்' படம் 'வலிமை' வெளிவந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகள் பற்றி உறுதியாகத் தெரிந்த பின்தான் மற்ற தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளைப் பற்றி முடிவு செய்வார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




