படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு | சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் | பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம் |
கொரோனா ஒமிக்ரான் அலை கடந்த மாதக் கடைசியிலிருந்து பரவ ஆரம்பித்தது. அதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய சில முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 50 சதவீத இருக்கை பிப்ரவரி 15 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கை இருந்தாலும் பழைய படி தினசரி 4 காட்சிகளை நடத்த தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒரிரு படங்களாக வெளியிட்டால் போட்டிகள் அதிகம் இல்லாமல் படங்களுக்கு வசூலைப் பெற வழி ஏற்பட்டுள்ளது. இதனால், திரையுலகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மாதத்தில் வெளிவந்த சிறிய பட்ஜெட் படங்கள் எதுவும் மக்களை வரவழைக்காத காரணத்தால் பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அடுத்த வெள்ளிக்கிழமை முதலே சில முக்கிய படங்கள் வெளிவர தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முன்னணி நடிகரின் படம் வெளிவரும் எனத் தெரிகிறது. இதனால், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.