ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கொரோனா ஒமிக்ரான் அலை கடந்த மாதக் கடைசியிலிருந்து பரவ ஆரம்பித்தது. அதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய சில முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 50 சதவீத இருக்கை பிப்ரவரி 15 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கை இருந்தாலும் பழைய படி தினசரி 4 காட்சிகளை நடத்த தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒரிரு படங்களாக வெளியிட்டால் போட்டிகள் அதிகம் இல்லாமல் படங்களுக்கு வசூலைப் பெற வழி ஏற்பட்டுள்ளது. இதனால், திரையுலகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மாதத்தில் வெளிவந்த சிறிய பட்ஜெட் படங்கள் எதுவும் மக்களை வரவழைக்காத காரணத்தால் பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அடுத்த வெள்ளிக்கிழமை முதலே சில முக்கிய படங்கள் வெளிவர தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முன்னணி நடிகரின் படம் வெளிவரும் எனத் தெரிகிறது. இதனால், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.