தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

அர்ஜுன் ரெட்டி, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 'நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்' என்கிற பீடா அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷாலினி பாண்டே.
அப்போது பேசிய அவர், “என்னுடைய செல்ல நாய்க்குட்டி பெயர் பிர். இதை நான் கடந்த 2021ல் ஹிமாச்சலில் இருந்து காப்பாற்றி, கொண்டுவந்து வளர்க்கிறேன். நாய்களுடன் பழகிய இந்த சில வருடங்களில் தான், நான் இன்னும் சிறந்த மனித நேயம் கொண்டவளாக மாறி இருக்கிறேன். உயர்ந்த ரக நாய்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக தெருவில் இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.