என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
ஹிட் சீரியல்களில் ஒன்றான 'கண்ணான கண்ணே' சீரியலில் பப்லு, நித்தியா தாஸ், நிமிஷிகா, ராகுல் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை நித்தியா தாஸ் யமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் சித்தியாக நடித்து வந்தார். அவரது கதாபாத்திரம் சீரியலில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரிலிருந்து நித்தியா தாஸ் ஏன் விலகினார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இனி யமுனா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, சின்னத்திரை வட்டாரங்களில் சோனியா போஸ் நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கண்ணானே கண்ணே தொடர் இதுவரை 300 எபிசோடுகள் வெற்றிகரமாக கடந்துள்ளது.