பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாவனியும் ஒருவர். 100 நாட்களுக்கு மேலாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதன்பிறகு ஏற்பட்ட தனது இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமீர் தன்னை காதலிப்பதாக கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்து விட்டார் பாவனி. இந்த நிலையில் ரசிகருடன் அவர் உரையாடியபோது, திருமணம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். அதற்கு, வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை. எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.




