'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருபவர் கண்மணி மனோகரன். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து தற்போது சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் சின்னத்திரை நடிகருடன் இவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது. தற்போது அவர் புது சீரியல் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக உருவாகி வரும் அந்த தொடரில், கலர் தமிழ் சேனலில் மாங்கல்ய தோஷம் தொடரில் நடித்த அருண் பத்மநாபன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.




