பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருபவர் கண்மணி மனோகரன். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து தற்போது சின்னத்திரை நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் சின்னத்திரை நடிகருடன் இவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது. தற்போது அவர் புது சீரியல் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக உருவாகி வரும் அந்த தொடரில், கலர் தமிழ் சேனலில் மாங்கல்ய தோஷம் தொடரில் நடித்த அருண் பத்மநாபன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.