ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
ஈஸ்வர் தனது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீயுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சில காலங்கள் நடிப்பில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவர் நீண்டநாள் கழித்து அன்பே சிவம் தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அன்பே சிவம்' தொடர் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் ஸ்ரீ, ரக்ஷா ஹோலா, கிருத்திகா லட்டு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இரண்டு தம்பதியினருக்கு இடையே நடக்கும் மோதலையும், காதலையும் மையப்படுத்தி சென்டிமெண்ட், ஆக்சன் என திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த தொடரில் நியூ என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.