ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஈஸ்வர் தனது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீயுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சில காலங்கள் நடிப்பில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவர் நீண்டநாள் கழித்து அன்பே சிவம் தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'அன்பே சிவம்' தொடர் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் ஸ்ரீ, ரக்ஷா ஹோலா, கிருத்திகா லட்டு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இரண்டு தம்பதியினருக்கு இடையே நடக்கும் மோதலையும், காதலையும் மையப்படுத்தி சென்டிமெண்ட், ஆக்சன் என திரைக்கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த தொடரில் நியூ என்ட்ரியாக பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.