சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு | வீரன் படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு! |
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை கடத்தல் வழக்கு முடிவுக்கு வர இருந்த நேரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னணி நடிகர் திலீப் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக திலீபின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து திலீப் மீது புதிதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 12 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. என்றாலும் 12 சாட்சிகளில் எட்டு சாட்சிகளை மறுபடியும் விசாரிக்கலாம் என்று அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. திலீப்பின் உறவினர்களின் செல்போன அழைப்புகளை பரிசோதிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது.