லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் இசை பணியை சந்தோஷ் நாராயணன் லண்டனில் தொடங்கியதை அடுத்து வடிவேலுவும் இயக்குனர் சுராஜ்-ம் லண்டன் சென்று இருந்தார்கள். பத்து நாட்களாக லண்டனில் தங்கி விட்டு சென்னை திரும்பிய அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதையடுத்து வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கும் வடிவேலுவை மூன்று நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதையடுத்து வடிவேலு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் என்னிடத்தில் நலம் விசாரித்தார்கள். மக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. நான் மிகவும் நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று வடிவேலு தெரிவித்திருக்கிறார்.