ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இந்த படத்தின் இசை பணியை சந்தோஷ் நாராயணன் லண்டனில் தொடங்கியதை அடுத்து வடிவேலுவும் இயக்குனர் சுராஜ்-ம் லண்டன் சென்று இருந்தார்கள். பத்து நாட்களாக லண்டனில் தங்கி விட்டு சென்னை திரும்பிய அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. அதையடுத்து வடிவேலு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கும் வடிவேலுவை மூன்று நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். இதையடுத்து வடிவேலு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் என்னிடத்தில் நலம் விசாரித்தார்கள். மக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. நான் மிகவும் நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று வடிவேலு தெரிவித்திருக்கிறார்.