சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இத்னானி என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் சித்திக் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நாளை (ஜன-3) முதல் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.
பொதுவாகவே கவுதம் மேனன், சிம்பு ஆகியோரின் படங்கள் பல காரணங்களால் தாமதமாவது வழக்கம் தான். ஆனால் இந்தப்படத்தை விரைந்து முடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவுதம் மேனன். மேலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது மாறிவரும் சூழலை மனதில் கொண்டு இந்த மாதத்திற்குள்ளேயே படத்தை முடித்துவிடும் மும்முரத்தில் இருக்கிறார் கவுதம் மேனன்.