எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இத்னானி என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் சித்திக் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நாளை (ஜன-3) முதல் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.
பொதுவாகவே கவுதம் மேனன், சிம்பு ஆகியோரின் படங்கள் பல காரணங்களால் தாமதமாவது வழக்கம் தான். ஆனால் இந்தப்படத்தை விரைந்து முடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவுதம் மேனன். மேலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது மாறிவரும் சூழலை மனதில் கொண்டு இந்த மாதத்திற்குள்ளேயே படத்தை முடித்துவிடும் மும்முரத்தில் இருக்கிறார் கவுதம் மேனன்.