நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்'. இப்படம் ஜன.,7ல் இந்தியா முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது. நேற்று படத்தின் பிரஸ் மீட் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது : ‛‛இந்தியா என்ற நாடு, நிறைய ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கி உள்ளோம். அதை படத்திலும் கொண்டு வந்துள்ளனர். நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன். இந்த படம் முந்தைய படங்களின் அத்தனை சாதனைகளையும் முறியடிக்கணும். இந்த படம் ஒரு துறையை, ஒரு மொழி படம் என்று எண்ண கூடாது. இந்த மொத்த படக்குழுவும் ஒட்டு மொத்த இந்தியாவாக கொண்டு வந்துள்ளனர். ஆகவே இதை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் ஒட்டு மொத்த இந்திய படம் என்று பார்க்கணும். எவ்வளவு நாள் தான் ஹாலிவுட் படங்களை உதாரணம் காட்டி நாம் பேசுவது, நம்ம படத்தை பார்த்தீங்களா என நாம் கேட்க வேண்டாமா. இந்த பட அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்திய சினிமாவின் பெருமை என்று தான் பார்க்கிறேன். இப்படி ஒரு படத்தை கொடுத்த ஒட்டுமொத்த ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கும் நன்றி. 2022ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஆர்ஆர்ஆர் படம் மட்டுமின்றி அஜித்குமாரின் வலிமை படமும் வெளியாகிறது. அதனால் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். இந்த படங்களுக்கு வரும் கூட்டத்தை போன்று எனது படத்திற்கும் ஒரு நம்பிக்கை கிடைக்கும்'' என்றார் சிவகார்த்திகேயன்.