காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
இயக்குனர் பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவரும், 'ஆச்சார்யா' என்ற படத்தை இயக்கியவருமான ஆச்சார்யா ரவி, உடல் நலக் குறைவால் காலமானார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது சொந்த உரான மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(டிச., 28) காலை காலமானார்.
'என்னதான் பேசுவதோ' என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்தப் படம் முடிந்து எட்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. அப்படத்தை எப்படியும் வெளியில் கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சியில் இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இயக்குனர் பாலா, சூர்யா இணையும் படத்திற்கான கதை விவாதத்தில் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.