‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குனர் பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவரும், 'ஆச்சார்யா' என்ற படத்தை இயக்கியவருமான ஆச்சார்யா ரவி, உடல் நலக் குறைவால் காலமானார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது சொந்த உரான மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(டிச., 28) காலை காலமானார்.
'என்னதான் பேசுவதோ' என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்தப் படம் முடிந்து எட்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. அப்படத்தை எப்படியும் வெளியில் கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சியில் இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இயக்குனர் பாலா, சூர்யா இணையும் படத்திற்கான கதை விவாதத்தில் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.