ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த சில மாதங்களாகவே சமந்தா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் அடிக்கடி ஹாட் டாபிக்காக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. பேமிலிமேன்-2 சர்ச்சை, கணவருடன் திருமண முறிவு என பிரச்சனைகள் சுழன்றடித்தாலும் அவற்றை எல்லாம் மறப்பதற்காக அவ்வப்போது நண்பர்களுடன் டூர் கிளம்பி விடுகிறார் சமந்தா. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு தான் ஆடிய நடனம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற சந்தோஷத்தில் தற்போது கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க கிளம்பி சென்றுள்ளார் சமந்தா.
கேரளாவில் ஆழப்புழாவில் தங்கியுள்ள அவர், தான் தங்கியிருக்கும் போட் ஹவுஸில் இருந்து இயற்கை காட்சியை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2014 ல் அவர் ஆலப்புழா சென்றிருந்தார். அதைவிட முக்கியமான விஷயம் அவரும் நடிகர் நாகசைதன்யாவும் இதே ஆழப்புழாவில் 2010ல் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஏ மாயா செசாவே என்கிற படத்தில் நடித்தபோதுதான் காதல் வசப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.