2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த சில மாதங்களாகவே சமந்தா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் அடிக்கடி ஹாட் டாபிக்காக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. பேமிலிமேன்-2 சர்ச்சை, கணவருடன் திருமண முறிவு என பிரச்சனைகள் சுழன்றடித்தாலும் அவற்றை எல்லாம் மறப்பதற்காக அவ்வப்போது நண்பர்களுடன் டூர் கிளம்பி விடுகிறார் சமந்தா. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு தான் ஆடிய நடனம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற சந்தோஷத்தில் தற்போது கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க கிளம்பி சென்றுள்ளார் சமந்தா.
கேரளாவில் ஆழப்புழாவில் தங்கியுள்ள அவர், தான் தங்கியிருக்கும் போட் ஹவுஸில் இருந்து இயற்கை காட்சியை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2014 ல் அவர் ஆலப்புழா சென்றிருந்தார். அதைவிட முக்கியமான விஷயம் அவரும் நடிகர் நாகசைதன்யாவும் இதே ஆழப்புழாவில் 2010ல் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஏ மாயா செசாவே என்கிற படத்தில் நடித்தபோதுதான் காதல் வசப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.