என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கடந்த சில மாதங்களாகவே சமந்தா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் அடிக்கடி ஹாட் டாபிக்காக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. பேமிலிமேன்-2 சர்ச்சை, கணவருடன் திருமண முறிவு என பிரச்சனைகள் சுழன்றடித்தாலும் அவற்றை எல்லாம் மறப்பதற்காக அவ்வப்போது நண்பர்களுடன் டூர் கிளம்பி விடுகிறார் சமந்தா. சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு தான் ஆடிய நடனம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற சந்தோஷத்தில் தற்போது கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க கிளம்பி சென்றுள்ளார் சமந்தா.
கேரளாவில் ஆழப்புழாவில் தங்கியுள்ள அவர், தான் தங்கியிருக்கும் போட் ஹவுஸில் இருந்து இயற்கை காட்சியை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2014 ல் அவர் ஆலப்புழா சென்றிருந்தார். அதைவிட முக்கியமான விஷயம் அவரும் நடிகர் நாகசைதன்யாவும் இதே ஆழப்புழாவில் 2010ல் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஏ மாயா செசாவே என்கிற படத்தில் நடித்தபோதுதான் காதல் வசப்பட்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.