தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி. மகாராஷ்டிராவை சேர்ந்தவர். அத்தாரிண்டிகி தாரேதி, ராமையா வஸ்தவய்யா, லெஜண்ட், மிர்ச்சி, பாய், பெங்கால் டைகர்போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஆடியும் உள்ளார்.
தற்போது அவர் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்புதான், அவருக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் குணமடைந்தாலும் மரபணு மூலம் வந்த புற்றுநோய் என்பதால் அவர் முழுமையாக அதிலிருந்து மீளவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய மார்பகத்தில் ஒரு சின்ன கட்டி வந்தது. என் வாழ்க்கை முன்பு போல இருக்கப்போவதில்லை என எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. 18 வருடங்களுக்கு முன்பு என் அம்மாவை ஒரு கொடிய நோய்க்கு பறிகொடுத்துவிட்டு இருட்டில் வாழ்த்துக் கொண்டிருந்தேன். நான் அதிகம் பயத்தில் இருந்தேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. அறுவை சிகிச்சை மூலமாக கட்டி அகற்றப்பட்டது. எனக்கு பரவல் இல்லை என மருத்துவர்கள் அப்போது கூறினார்கள்.
ஆனால் அது குறைந்த காலம் மட்டுமே. அதன் பின் எனக்கு மீண்டும் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சை மிக தீவிரமானது. நான் தற்போது வரை 9 முறை கீமோதெரபி செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது. இந்த கொடிய நோய் என்னை சாகடிக்க அனுமதிக்க மாட்டேன். மீண்டு வந்து சினிமாவில் நினைத்ததை சாதிப்பேன். என்கிறார் ஹம்சா நந்தினி.