'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரேம்.. பிரியாணி, சர்க்கார், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரேம், தான் நடித்த பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லனாக அவதாரம் எடுப்பவராகவும் தான் அதிக அளவில் நடித்துள்ளார். தற்போதும் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் பிரேம்.
இந்தநிலையில் முதன்முறையாக வாஸ்கோடகாமா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிரேம்.. நகுல் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஆர்ஜி கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். குணச்சித்திர நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அபூர்வமான விஷயம்.. அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது பெருமையான ஒன்று என கூறும் பிரேம், அந்த கதாபாத்திரங்கள் குறித்து இப்போது எதுவும் என்னால் சொல்லமுடியாது என கூறியுள்ளார்.