டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரேம்.. பிரியாணி, சர்க்கார், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரேம், தான் நடித்த பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லனாக அவதாரம் எடுப்பவராகவும் தான் அதிக அளவில் நடித்துள்ளார். தற்போதும் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார் பிரேம்.
இந்தநிலையில் முதன்முறையாக வாஸ்கோடகாமா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிரேம்.. நகுல் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை ஆர்ஜி கிருஷ்ணன் என்பவர் இயக்குகிறார். குணச்சித்திர நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது அபூர்வமான விஷயம்.. அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது பெருமையான ஒன்று என கூறும் பிரேம், அந்த கதாபாத்திரங்கள் குறித்து இப்போது எதுவும் என்னால் சொல்லமுடியாது என கூறியுள்ளார்.