படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கவனம்பெற்ற குறும்படங்களை இயக்கியவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கிய மூடர் என்ற குறும்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்கி உள்ள திரைப்படம் ஆத்மிகா. ஆனந்த் நாக் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்திருந்தார். இதுதவிர பிரேமம், நேரம் படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளர் ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜீவா ரவி, பிர்லா போஸ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண்குமார் இசையமைத்துள்ளார்.
தாமோதரன் செல்வகுமார் கூறியதாவது : படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். பலரும் குறும்படத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். சினிமா மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளோம். பல பிரச்சினைகளில் பல்வேறு தடைகளுக்கிடையே படத்தை முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு வாகனங்கள் கூட செல்லாத பல இடங்களில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம் என்றார்.