மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் இந்த இரண்டு துறைகளின் முக்கிய அதிகார மையங்களாக திகழ்ந்த, இப்போதும் திகழ்கின்ற ஏரியா என்றால் அது சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் இங்கே தான் உள்ளன. சமீபத்தில் கூட நடிகர் தனுஷும் இங்கே இடம் வாங்கி தனி வீடு கட்டு ஒன்றை பிரமாண்டமாக கட்டி வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாராவும் தற்போது இந்தப்பகுதியில் உள்ள பிரமாண்டமான அபார்ட்மெண்ட் ஒன்றில் நான்கு படுக்கையறை வசதி கொண்ட இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நல்ல நாள் பார்த்து இந்த வீட்டில் குடியேற இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின் அமைதியான இந்த ஏரியாவில் தான் வசிக்கவும் விரும்புகிறாராம்.