'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏன், இந்தியத் திரையுலகத்திலேயே தங்களது அபிமான நடிகர்களின் அதி தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான். ஒரு காலத்தில் சென்னையில் தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு நடக்கும். இங்குதான் தெலுங்கு நடிகர்கள் வசித்து வந்தார்கள். திருப்பதிக்கு செல்லும் தெலுங்கு ரசிகர்கள் அப்படியே சென்னை வந்து தங்கள் அபிமான நடிகர்களைப் பார்க்கக் காத்துக் கிடப்பார்கள்.
அந்த ஆவல் தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. 'ராதே ஷ்யாம்' நடிகர் பிரபாஸின் அதி தீவிர ரசிகர் ஒருவர் அவரது தலையில் பிரபாஸ் என்ற ஆங்கில வார்த்தைகளில் மட்டும் முடியை டிசைன் செய்து மற்ற இடத்தை மொட்டை அடித்திருந்தார். அந்த ரசிகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரபாஸ் அவரை அழைத்து சந்தித்துப் பேசி அவருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பப் போகிறார்களோ ??....