நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏன், இந்தியத் திரையுலகத்திலேயே தங்களது அபிமான நடிகர்களின் அதி தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான். ஒரு காலத்தில் சென்னையில் தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு நடக்கும். இங்குதான் தெலுங்கு நடிகர்கள் வசித்து வந்தார்கள். திருப்பதிக்கு செல்லும் தெலுங்கு ரசிகர்கள் அப்படியே சென்னை வந்து தங்கள் அபிமான நடிகர்களைப் பார்க்கக் காத்துக் கிடப்பார்கள்.
அந்த ஆவல் தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. 'ராதே ஷ்யாம்' நடிகர் பிரபாஸின் அதி தீவிர ரசிகர் ஒருவர் அவரது தலையில் பிரபாஸ் என்ற ஆங்கில வார்த்தைகளில் மட்டும் முடியை டிசைன் செய்து மற்ற இடத்தை மொட்டை அடித்திருந்தார். அந்த ரசிகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரபாஸ் அவரை அழைத்து சந்தித்துப் பேசி அவருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பப் போகிறார்களோ ??....