ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏன், இந்தியத் திரையுலகத்திலேயே தங்களது அபிமான நடிகர்களின் அதி தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான். ஒரு காலத்தில் சென்னையில் தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு நடக்கும். இங்குதான் தெலுங்கு நடிகர்கள் வசித்து வந்தார்கள். திருப்பதிக்கு செல்லும் தெலுங்கு ரசிகர்கள் அப்படியே சென்னை வந்து தங்கள் அபிமான நடிகர்களைப் பார்க்கக் காத்துக் கிடப்பார்கள்.
அந்த ஆவல் தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. 'ராதே ஷ்யாம்' நடிகர் பிரபாஸின் அதி தீவிர ரசிகர் ஒருவர் அவரது தலையில் பிரபாஸ் என்ற ஆங்கில வார்த்தைகளில் மட்டும் முடியை டிசைன் செய்து மற்ற இடத்தை மொட்டை அடித்திருந்தார். அந்த ரசிகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரபாஸ் அவரை அழைத்து சந்தித்துப் பேசி அவருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பப் போகிறார்களோ ??....