அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏன், இந்தியத் திரையுலகத்திலேயே தங்களது அபிமான நடிகர்களின் அதி தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான். ஒரு காலத்தில் சென்னையில் தான் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு நடக்கும். இங்குதான் தெலுங்கு நடிகர்கள் வசித்து வந்தார்கள். திருப்பதிக்கு செல்லும் தெலுங்கு ரசிகர்கள் அப்படியே சென்னை வந்து தங்கள் அபிமான நடிகர்களைப் பார்க்கக் காத்துக் கிடப்பார்கள்.
அந்த ஆவல் தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. 'ராதே ஷ்யாம்' நடிகர் பிரபாஸின் அதி தீவிர ரசிகர் ஒருவர் அவரது தலையில் பிரபாஸ் என்ற ஆங்கில வார்த்தைகளில் மட்டும் முடியை டிசைன் செய்து மற்ற இடத்தை மொட்டை அடித்திருந்தார். அந்த ரசிகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரபாஸ் அவரை அழைத்து சந்தித்துப் பேசி அவருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பப் போகிறார்களோ ??....