ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். தான் நடித்து வந்த வெயில் படத்தில் சம்பளம் அதிகமாக கேட்டு தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்து ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளானார். அதன்பின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஷேன் நிகம். அப்படி அவர் நடிக்கும் ஒரு படம் தான் பெர்முடா.
இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயகியுள்ளார். பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவரும், சில வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை இயக்கியவரும் இவர் தான்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை மோகன்லால் பாடியுள்ளார். டி.கே.ராஜீவ் குமாரின் டைரக்சனில் சில படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இளைய தலைமுறைக்கான கொண்டாட்டமான பாடலாக இது இருக்கும் என்பதால் இந்த பாடலை பாடவேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் மோகன்லால்.