ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹன்சிகா மொத்வானிக்கு, இந்தாண்டு, மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமாக கழிந்திருக்கிறது. தற்போது, சிம்புவுடன், "வாலு, வேட்டை மன்னன் ஆர்யாவுடன், "சேட்டை மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "இந்தாண்டில், உங்களின் திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது என, ஹன்சிகாவிடம் கேட்டபோது, "இந்தாண்டில், என்னை விட, யாரும் அதிக சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. ஆண்டு முழுவதும், படப்பிடிப்புகளில் பிசியாகவே இருந்தேன். ஒரு ஆண்டு, உருண்டோடியதே தெரியவில்லை என, பெருமூச்சு விடுகிறார்.
"என்னுடைய இந்த திருப்திகரமான திரையுலக வாழ்வுக்கு, என்னுடன் நடித்த நட்சத்திரங்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என, அனைவருக்கும் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக, என் படங்களை பார்த்து, ரசித்த ரசிகர்களுக்கும், என் வெற்றியின் பெரும் பங்கு, சேர வேண்டும். இந்தாண்டை போலவே, அடுத்தாண்டும், எனக்கு வாய்ப்புகள் குவிய வேண்டும். இதற்காக கடவுளிடம், மனம் உருக, பிரார்த்திக்க போகிறேன் என, உணர்ச்சி வசப்படுகிறார்.