ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிட்டு வருகிறேன், என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய தமன்னா அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுவரை என்ன சாதித்தேன் எத்தனை பேருக்கு உதவியாக இருந்தேன் என்றெல்லாம் திரும்பி பார்ப்பேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன். ஆதரவற்றோருக்கு உதவுகிறேன். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பர். எனவே நான் செய்யும் உதவிகளை விளம்பரபடுத்த விரும்பவில்லை.
2005ல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தேன். இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். யாரும் கையை பிடித்து அழைத்து செல்லமாட்டார்கள். நாமாகத்தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும். படப்பிடிப்புக்காக நிறைய நாடுகளை சுற்றி வந்து விட்டேன். அதில் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடித்தது. அங்கு ஷாப்பிங் போவது மகிழ்ச்சியாக இருக்கும். சீனாவுக்கு படப்பிடிப்புக்கு சென்ற போதுதான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், என்றார்.