பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய அண்ணாத்த, ஜெய்பீம், எனிமி மற்றும் சாம்ஸின் ஆபரேஷன் ஜுஜுபி என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜெய் பீம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே ஒடிடியில் வெளியாகி விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த நான்கு படங்களில் ஆபரேஷன் ஜுஜுபி தவிர்த்து மற்ற மூன்று படங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த வருடத்தில் அவர் நடித்த பாவ கதைகள் என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் ஆந்தாலாஜி படம் தான்.. ஆனால் இப்படி ஒரு பண்டிகை ரிலீஸில் ஒரேசமயத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாவது அவரது திரையுலக பயணத்தில் இதுதான் முதன்முறை.
அதுமட்டுமல்ல, தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு மெயின் வில்லனாக பல படங்களில் நடித்திருந்த பிரகாஷ்ராஜ், இத்தனை வருடங்களில் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ரெண்டு நிமிடம் மட்டுமே வந்துபோகும் சாதாரண கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து தற்போது அவருக்கு வில்லனாக நடித்து அந்த குறையையும் தீர்த்து விட்டார்.
அதேபோல சூர்யாவுடன் சிங்கம் படத்திலும் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் இதற்குமுன் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தாலும் கூட 11 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவருடனும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
பிரகாஷ்ராஜின் நடிப்பை ரசிப்பதற்கென்றே உள்ள ஒரு ரசிகர் கூட்டம் “இந்த தீபாவளி முத்துப்பாண்டி கோட்டை டா” என சோஷியல் மீடியாவில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.