'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

இயக்குனர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் முதன்முதலாக உருவாக்கி வரும் படம் 'யானை'. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க. பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் அருண்விஜய்யின் 33வது படமாக இது உருவாகி வருகிறது. ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகை ராதிகா இந்தப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.. கூடவே பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரியின் மனைவி பிரீத்தா விஜயகுமாருடன் படப்பிடிப்பில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். பூஜை, சிங்கம்-3 படங்களை தொடர்ந்து ஹரியின் டைரக்சனில் ராதிகா நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




