75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? |

மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 2018ல் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் கேரளாவில் கொச்சியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் மறியல் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் கொச்சியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் பிரபல அரசியல் கட்சியினர் நேற்று காலை மறியல் செய்தனர். இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த நடிகர் ஜோஜு ஜார்ஜும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
நேரம் ஆக ஆக பொறுமை இழந்த ஜோஜு ஜார்ஜ், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சென்று போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறினார். இதனால் கோபமான போராட்டக்காரர்கள் அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். இதை தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜோஜு ஜார்ஜ்.
இந்த பரபரப்பான நிகழ்வு குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை தொடர்ந்து மறியல்காரர்கள் ஜோஜு ஜார்ஜ் குடித்துவிட்டு வந்து போராட்டக்காரர்களிடம் தெருவில் சண்டை போடும் குண்டர் போல நடந்து கொண்டதாகவும், பெண் ஒருவரிடம் அநாகரிகமாக பேசியதாகவும் புகார் அளித்தனர்.. ஆனால் போலீஸார் விசாரணையிலும் சோதனையிலும் ஜோஜு ஜார்ஜ் மது அருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஜோஜு ஜார்ஜ் கூறும்போது, “அவர்கள் சொன்னதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது அங்கிருந்த பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்.. நான் போராட்டத்திற்கு எதிரானவன் அல்ல. அதேசமயம் பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்பட கூடாது இல்லையா?. அதைத்தான் அவர்களிடம் கூறினேன்.. மேலும் நான் மது அருந்துவதை நிறுத்தி ஐந்து வருடங்கள் ஆகின்றன” என கூறியுள்ளார்.