மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… | மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை |
சரவணன் மீனாட்சி என்ற பெயரையும் அதன் தீம் சாங்கையும் கேட்டவுடன் முதன் முதலில் மனதிற்கு வருவது செந்திலும், ஸ்ரீஜாவும் தான். அந்த அளவுக்கு சரவணனாகவும் மீனாட்சியாகவும் காதல் ஜோடியாக வாழ்ந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அதன் பிறகு சரவணன் மீனாட்சியில் பல சீசன்கள் வந்தாலும் அவை வெற்றியே அடைந்திருந்தாலும் கூட மனதுக்குள் நிலைத்து நிற்பது என்னவோ அந்த முதல் காதல் ஜோடி தான்.
நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்ட செந்திலும் ஸ்ரீஜாவும் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் செந்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் இருக்கும் ஸ்ரீஜா வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது தனது காதல் கணவருக்கு ஒரு பேப்பர் கப்பல் செய்து அதில் பூக்களை வைத்து ஸ்ரீஜா பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பி வைக்கிறார். இது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர்களிடையே நடக்கும் இந்த குறும்புத்தனமான அழகான ரொமான்ஸை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அதே சமயம் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டுக்கொண்டிருக்க அங்கு மழைத்தண்ணீரில் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்து இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா என கலாய்த்தும் வருகின்றனர்.