பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் இரண்டு மாத காலமாகிவிட்டது. கடந்த இரண்டு மாத காலமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி வருவதால் நவம்பர் 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதுவரையில் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே 'கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3' ஆகிய படங்கள் லாபகரமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் பல படங்களை வெளியிட உள்ளார்கள். வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்றால் அடுத்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.