பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் இரண்டு மாத காலமாகிவிட்டது. கடந்த இரண்டு மாத காலமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி வருவதால் நவம்பர் 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதுவரையில் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே 'கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3' ஆகிய படங்கள் லாபகரமாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் பல படங்களை வெளியிட உள்ளார்கள். வாரத்திற்கு நான்கைந்து படங்களாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்றால் அடுத்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.