'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
சென்னை: ஆஸ்கர் 2022 போட்டிக்கு இந்தியா சார்பில் கூழாங்கல் படம் போட்டியிட உள்ளது.
ஆஸ்கர் எனப்படும், 94வது அகாடமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடக்கிறது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடந்தது. இதில் , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் சர்தார் உத்தாம், ஷேர்னி, செல்லோ ஷோ, நாயாட்டு படங்களும், தமிழில், கூழாங்கல், மண்டேலா உள்பட 14 படங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.
![]() |
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம், 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில், 14 படங்களையும் பார்வையிட்டனர் இதில், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் உருவான, கூழாங்கல் படம் தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக கூழாங்கல் தேர்வாகியுள்ளது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
சமீபத்தில், ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், கூழாங்கல் படத்துக்கு டைகர் விருது கிடைத்தது. இந்த வகையில் டைகர் விருதை பெற்ற முதல் படமாக இப்படம் உள்ளது. யதார்த்தமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகிறது.