பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
லூசிபர் என்கிற படத்தின் மூலம் மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானதுடன் மோகன்லாலுக்கு முதல் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அந்த படம் வெற்றி பெற்ற கையோடு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாக இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதை தற்காலிகமாக வைத்து ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது ப்ரோ டாடி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கியுள்ளார் பிரித்திவிராஜ்.
இந்த படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவில் தற்போதும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல் இல்லாததால் இந்த ப்ரோ டாடி படமும் ஓடிடியில்தான் ரிலீசாக இருக்கிறது.