இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லூசிபர் என்கிற படத்தின் மூலம் மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானதுடன் மோகன்லாலுக்கு முதல் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அந்த படம் வெற்றி பெற்ற கையோடு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாக இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதை தற்காலிகமாக வைத்து ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது ப்ரோ டாடி என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கியுள்ளார் பிரித்திவிராஜ்.
இந்த படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவில் தற்போதும் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல் இல்லாததால் இந்த ப்ரோ டாடி படமும் ஓடிடியில்தான் ரிலீசாக இருக்கிறது.