நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் தான் த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் என்கிற படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை பவன் கல்யாணுக்காக பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
தற்போது பவன் கல்யாண் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸுக்கு இன்னொரு கூடுதல் பொறுப்பையும் வழங்கியுள்ளார். தனது சொந்த நிறுவனமான பவன்கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பாக அடுத்ததாக ராம்சரணை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார் பவன்கல்யாண். இந்த படத்திற்கு சரியான இயக்குனர், சரியான கதை என அனைத்தையுமே தேர்ந்தெடுத்து செய்யும் பொறுப்பை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் ஒப்படைத்துள்ளார் பவன் கல்யாண். அல்லு அர்ஜுனுடனான தனது படத்தை துவங்குவதற்கு முன்பாக இந்த வேலைகளை முடித்துக் கொடுக்க தீவிரமாக இறங்கியுள்ளார் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.