‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் தான் த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேசமயம் மலையாளத்தில் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் உருவாகி வரும் பீம்லா நாயக் என்கிற படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை பவன் கல்யாணுக்காக பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
தற்போது பவன் கல்யாண் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸுக்கு இன்னொரு கூடுதல் பொறுப்பையும் வழங்கியுள்ளார். தனது சொந்த நிறுவனமான பவன்கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பாக அடுத்ததாக ராம்சரணை வைத்து ஒரு படம் தயாரிக்கிறார் பவன்கல்யாண். இந்த படத்திற்கு சரியான இயக்குனர், சரியான கதை என அனைத்தையுமே தேர்ந்தெடுத்து செய்யும் பொறுப்பை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் ஒப்படைத்துள்ளார் பவன் கல்யாண். அல்லு அர்ஜுனுடனான தனது படத்தை துவங்குவதற்கு முன்பாக இந்த வேலைகளை முடித்துக் கொடுக்க தீவிரமாக இறங்கியுள்ளார் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.